Monday, August 25, 2014

கண்ணனின் பிறப்பு

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு
,
வணக்கம்.
மாயக்கண்ணனின் பிறப்பை பற்றி எப்படி எல்லாமோ படித்து மகிழ்ந்து இருக்கிறோம்,ஆனால் இது ஒரு வித்தியாசமான புனைவு! மெய் சிலிர்க்கிறது!

 “பொன்முடிகொண்டு பிறக்கவில்லை. பெரும்புகழ்கொண்டு பிறக்கவில்லை. பொல்லாப்பழிகொண்டு பிறந்திருக்கிறான்! பாலாடி பழியாடி பலநூலில் பகடையாடி பசுங்குருதியாடி எழுக என் தெய்வம்! எழுக! எழுக என் தெய்வம்! எழுக!” கைதட்டி நடனமிட்டு கூவிநகைத்து கம்சரைச் சுற்றிவந்தார். "

அன்புடன்,
அ .சேஷகிரி.


அன்புள்ள சேஷகிரி

கண்ணனின் பிறப்பில் வழிந்த குருதியை உணராமல் அவனை புரிந்துகொள்ள முடியாது. அதற்கு எளிமையான புராணவிளக்கங்கள் உதவாது.

ஜெ