Wednesday, August 27, 2014

நீலம் இருமொழி

அன்புள்ள ஜெ

நீலம் இரண்டு மொழிநடைகளுக்குள் ஓடுகிறது. ஒருமொழி கதை சொல்கிறது. இன்னொன்று கதையே இல்லாமல் செல்கிறது. கதைசொல்லி மொழியில் வரும் கண்ணன் கதை குரூரமான அழகியலுடன் இருக்கிறது. ராதையின் மொழி பரவசமும் அழகும் மட்டுமே கொண்டிருக்கிறது

இரண்டையும் மாறி மாறி வாசிப்பது ஒரு பெரிய நெருக்கடியை அளிக்கிறது குருதியாடி வருக என் தெய்வம் என்று வசுதேவன் சொல்லும்போது நாம் காணும் கண்ணன் ஒருவன். ராதை இடுப்பிலே தூக்கி வைத்து காக்காவை காட்டி கொஞ்சும் கண்ணன் வேறு ஒருவன்

கண்ணனுக்கு உண்மையிலேயே இரு முகங்கள். ரத்தம் தோய்ந்த கதை அவனுடையது. அதனால்தான் அவனுக்கு கோகுலம் என்ற அழகிய கனவுலகை படைத்துக்கொடுத்தார்கள் இல்லையா. இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடாத இரண்டு கதைகள் இரண்டையும் ஒன்றாக ஆக்க முயல்கிறீர்கள்

இரண்டும் இணைந்து வரும்போது ஒன்றை ஒன்று உக்கிரமாக ஆக்கிவிடுகிறது ஜெ

சுகுமார்