Thursday, October 23, 2014

எழுதுவதுபற்றி





மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு ,

வணக்கம். பத்து ஆண்டுகளாக நான் உங்கள் வாசகன், உங்கள் எல்லா எழுத்துகளையும் தொடர்ந்து படித்து வருகிறேன்ஒருவகையில் நீங்கள் என் மானசீக குரு. இப்பொழுது வெண்முரசின் பிடியில். ‘நீலம் மலரந்த நாட்கள்எனக்குப் பெரிய திறப்பு. 

என் தாழ்மையான வேண்டுகோள், உங்கள் பிரயாகை மனநிலை பற்றியும் அவ்வப்போது, கடிதங்களுக்கு பதில் எழுதும் போதாவது சிறிது எழுத முடிந்தால், என்னை போல் உளவியலில் ஆர்வம் (உங்கள் மூலமே ஏற்பட்டது) உடையவர்களுக்கு உதவியாக இருக்கும். ( மற்றபடி, பிரயாகையின் முதல் வரி, இப்பொழுது என் ஆப்தவாக்கியம். என்னைப்பற்றி ஊர் தஞ்சை. பணியிடம் கட்டார், மின்னியல்-பொறியாளன். - தஞ்சையிலிருந்து வாசகர் கடிதமே வருவதில்லையென முன்பு நீங்கள் சொன்னது நினைவிற்கு வருகிறது )  

   நன்றிகள் பல!
கருணாகரன்

அன்புள்ள கருணாகரன்,

எழுதலாம். ஆனால்.பலசமயம் எழுதவேமுடியாது என்பதையே எழுதவேண்டியிருக்கும்

ஜெ