Friday, November 28, 2014

குடாகாசன்



வலைக்கூடைக்குள் இருக்கும் வானம்,வலைக்குள்ளும் இருக்கிறது. அதேசமயம் வலைக்கு வெளியேயும் பரவியிருக்கிறது - [வெண்முரசு பிரயாகை 37]

ஒரேசமயம் விளையாட்டுப்பையனின் விதண்டாவாதமாகவும் யோசித்தால் ஆழமானதாகவும் இருக்கும் உவமை.

குடாகாசம் மடாகாசம் வேதாந்தத்தில் உண்டு [ஆனால் அதை ஆதிசங்கரர் சொன்னா என்று நினைவு. ] அதை இப்படி ஒடிக்கமுடியும் என்பதை நினைத்துச் சிரித்தேன்

அது கிருஷ்ணனின் குடாகாசம்தான். ஒரே சமயம் அவன் குடத்துக்குள்ளும் இருக்கிறான். ஆயிரக்கணக்கான வாசல்கள் வழியாக வானமாகவும் இருக்கிறான்

அதை எப்படி வேதாந்திகளால் புரிந்துகொள்ளமுடியு?

சீனிவாசன்


அன்புள்ல சீனிவாசன்

குடாகசம் மடாகாசம் வேதாந்தத்தின் தொன்மையான உவமையாக இருக்கலாம். ஏனென்றால் உவமைகளை மாற்றும் வழக்கம் இந்திய தத்துவ மரபில் இல்லை. கயிற்றரவு போன்ற உவமைகளை ஆயிரம் வருடமாக கையாள்கிறோம் அல்லவா?

ஏனென்றால் உவமை என்பது ஒரு பிரமாணம். ஆகவே சங்கரரருக்கு முன்னரே வேதாந்தப் பள்ளிகளில் இருந்த உவமை அது என எடுத்துக்கொண்டேன்

ஜெ