Sunday, November 30, 2014

பாண்டவர்களின் மனமாற்றம்



அன்புள்ள ஜெமோ,

சகுனியின் மனமாற்றம் குறித்து கிட்டதட்ட மூன்று அத்தியாயங்களில் சொன்னீர்கள்.
ஆனால் நகர் புகும் பாண்டவர்கள் சட்டென்று முறைமை மீறுபவர்களானது பற்றி அதிகம் சொல்லப்படாதது குழப்பம் விளைவிக்கிறது. 
நான் தான் படிக்கும் போது எதாவது விட்டுவிட்டேனா என்று குழப்பம் அடைகிறேன்.

அன்புடன்,
ஜெய்கணேஷ். 

அன்புள்ள ஜெய்கணேஷ்

சகுனி , துரோணர், துருபதன், சிகண்டி, துரியோதனன் போன்றவர்கள் ஓர் ஆளுமையில் இருந்து இறந்து இன்னொன்றாக பிறக்கிறார்கள். அதற்கு உச்சகட்ட trauma தேவையாகிறது

பாண்டவர்கள் அப்படி எந்த பெரிய தலைகீழ் மாறுதல்களையும் அடையவில்லை. அவர்கள் இளைஞர்களாக படிப்படியாக உருவாகி வருகிறார்கள். அக்காலத்தில் இயல்பாக போரில் கடைப்பிடிக்கப்படும் மீறல்களே அவர்களிடம் இருக்கின்றன.

சகுனிக்கு நிகரான மாற்றம் பாண்டவர்களில் இருப்பதாக நீங்கள் நினைக்க நாவலில் முகாந்திரம் இல்லை என்றே நினைக்கிறேன். அர்ஜுனன், தருமன் ஆகியோரில் இருப்பது தங்கள் ஆளுமையை வடிவமைக்கும்பொருட்டு அவர்கள் அடையும் தத்தளிப்பும், சஞ்சலங்களும் , தேடலும் மட்டுமே

அதில் அர்ஜுனனுடைய தத்தளிப்பு மிக விரிவாக பல படிகளாக வந்துகொண்டே இருக்கிறது
ஜெ