Thursday, January 29, 2015

ஆயிரம் வாழ்க்கைகள்



[பெரிதாகக் காண படத்தின் மேல் சுட்டவும்]

அன்புள்ள ஜெமோ

வெண்முரசின் மழைப்பாடலைத்தான் இப்போது வாசித்துக்கொண்டிருக்கிறேன். கதை என்று பெரிதாக ஒன்றுமில்லை . பாண்டவர்கள் பிறக்கிறார்கள். ஆனால் அதைச் சொன்னதில் இருக்கிற grandeur பிரமிக்கவைக்கிறது. எவ்வளவு காட்சிகள். பிரம்மாண்டமான படை நகர்வுகள்.பெரிய கோட்டைகள் நிலங்கள். ஒரே அத்தியாயத்தில் வம்சங்களே உருவாகி வளரக்கூடிய காட்சிகள் .ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்து போகும் ஏராளமான புராணக்கதைகள். பிரமிப்பை ஏற்படுத்தியது என்றால் சாதாரணமாகச் சொல்வதுபோல ஆகிவிடும் அதற்கும் மேலே. ஒரு தனி ஜென்மம் எடுத்து அங்கெல்லாம் வாழ்வதுபோல இருந்தது. மழை வெயில் புயல் பாலைவனக்காற்று பனி காட்டுத்தீ என்று எல்லாவற்றையுமே பார்த்துவிட்டேன். நான் வாசித்ததில் மிகப்பெரிய கனவு என்றால் அது மழைப்பாடல்தான். முழுக்க வாசித்துவிட்டு எழுதுகிறேன்

எஸ். பாஸ்கர்