Tuesday, February 10, 2015

ஐங்குருளை



அன்பின் ஜெ,

வெண்முரசுக்குள் நுழைய அது எப்போதும் அதற்குண்டான மனோநிலையை /அர்பணிப்பை கோருகின்றது அக தடுமாற்றத்துடன் அதன் ஒரு பாராவை கூட தாண்டிவிட முடியாது. அதை இன்று மீண்டும் உணர்ந்தேன்.
விறலி முறைமைகளை வகுத்தபோது பருவ தேவதைகளை படித்தபோது அடைந்த அதே எழுச்சி.

சிசிரம் ஆழ்ந்த உள்ளர்த்தம் மிக்க படிமம்.“பெண்ணென ஆகி வந்துள்ளது பெருவிழைவென்று அறிக! உண்ணவும் கொள்ளவும் முகிழ்க்கவும் நிறைக்கவும் எழுந்த பேரவா. இந்த வரிகளை எண்ண எண்ண மனசித்திரம் மிக பிரமாண்டமாக விரிகிறது.

”ஐந்து முலைக்காம்புகளால் குருளைகளுக்கு அமுதூட்டும் ஓநாய்'' காமமும் பசியும் உணர்வுகளால் ஒரு புள்ளியில் ஒன்றாகும்தருணம் .

விஜய் சூரியன்