Wednesday, March 25, 2015

கருஞ்சிறுத்தை



அன்புள்ள ஜெ,

நலம்தானே?

திரௌபதி நகரத்தை அமைக்க எண்ணும் இடம் இப்போதுதான் வாசித்தேன். அது பாண்டவர்களின் கனவு என மகாபாரதம் சொல்லும்போது அதை நீங்கள் திரௌபதியின் கனவு என்கிறீர்க்ள்

பேராசை கொண்ட அத்தனை ஆட்சியாளர்களும் ஒரு உட்டோப்பியாவை அமைத்திருக்கிறார்கள். திரௌபதி கனவு காண்பதும் அதைத்தான் இல்லையா

துவாரகைக்கும் இந்திரப்பிரஸ்தத்துக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அவற்றை அமைத்தவர்களுக்குப்பின் அந்நகரங்கள் நீடிக்கவில்லை. பாண்டவர்கள் அஸ்தினபுரியை கொண்டுதான் ஆட்சி செய்கிறார்கள்

திரௌபதி என்னும் கருஞ்சிறுத்தையை கன்னிலே காட்டிய அத்தியாயம்

பாஸ்கர்