Saturday, March 28, 2015

குபேரனின் நோய்




ஜெ,

வெண்முரசில் வரும் குபேரனின் கதையில் நீங்கள் அளித்திருக்கும் மேலதிக அடுத்தம் வியப்பூட்டுகிறது. குபேரனை பொன்னின் காவலன், அரசன் என்ற் சொல்லலாம். குபேரனின் உடல் அழுகிக்கொண்டிருக்கும் தொழுநோயாளியின் உடல். அந்த அழுகல் என்பது பொன்னில் இருந்து வந்த அழுகலே என்பது ஒரு சிறந்த கற்பனை

கம்பனும் இலங்கையை அற்புதமாக வர்ணிக்கிறான். அத்தனை சிறப்பான நகரம் எப்படி அரக்கர்களின் நகரமாக இருந்தது என்பதர்கான விளக்கமாக உத்தர ராமாயணத்தில் இருந்து இந்தக் கதையை அளித்திருக்கிறீர்கள். வெறும் அகந்தைக்காகவே உருவாக்கப்பட்ட நகரம் அது. அதற்கு வேறெந்த நோக்கமும் இல்லை. அகந்தை அழுகக்கூடியது

அகந்தையின் சித்திரத்தை அளிக்கும் இலங்கையின் கதையுடன் இந்திரப்பிரஸ்தையும் இணைத்திருப்பதில் இருக்கிறது படைப்புவேகம்


முரளி கிருஷ்ணன்