Thursday, April 30, 2015

ரத்தம் அறியும்



ஜெ

இன்று பாண்டவர்களும் கௌரவர்களும் சந்திக்கும் இடம் மிகமிக நுட்பமாகச் சொல்லப்பட்டிருந்தது. அவர்களை கிருஷ்ணன் நுட்பமாகக் கூட்டிச்சென்றுவிடுகிறான். சந்திக்கிறார்கள். என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ஏதோ பேசுகிறார்கள். கண்களால் சந்திப்பதில்லை. அபப்டியே முடிந்திருக்கும்

ஆனால் கிருஷ்ணன் ஒன்று செய்கிறான்


கிருஷ்ணன் தன் இடக்கையால் துரியோதனனின் வலக்கையைப் பிடித்து “மீண்டும் கதை ஏந்தும் தோள்களுடன் காணவிழைகிறேன், மூத்தவரே” என்றான். “அதைத்தான் வரும்போது பார்த்தனிடமும் சொன்னேன்.” இயல்பாக அவன் தன் மறுகையால் யுதிஷ்டிரன் கையைப் பற்றினான். “நிகழ்ந்தது எதுவாக இருப்பினும் ஒரு நோய் என்றே அதைக்கொள்ளவேண்டும் என்றேன்.” அவன் துரியோதனன் கையை யுதிஷ்டிரன் கையுடன் பிணைத்து “உடன்பிறந்தவர் நோய் உசாவுவதைப்போல மருந்து ஏதுமில்லை” என்றான்.

அற்புதமான வேலை. இருவரையும் தொடவைத்துவிடுகிறான். அப்படியே உடைந்துவிடுகிறார்கள். பனி விலகிவிடுகிறது. மூளை மனசு எல்லாம் மாரி மாறிப் புரிந்துகொள்ளாது. உடம்புதான் புரிந்துகொள்ளும். ரத்தம்தான் புரிந்துகொள்ளும். அதைக் காணமுடிந்த இடம் அது. அதை அறிந்தவன் கிருஷ்ணன்

ஆர். மூர்த்தி