Wednesday, May 6, 2015

முதலிடத்தில்



ஜெ

திருதராஷ்டிரர் மகிழ்ச்சி மிகுந்தபோது விதுரரைப்பற்றித்தான் நினைக்கிறார். விதுரைக்கூப்பிடுங்கள் என்று சத்தம்போடுகிறார். திட்டுகிறார்

அதேபோல துரியோதனன் மகிழ்ச்சி மிகுந்ததும் கர்ணன் பற்றித்தான் நினைக்கிறான். அவனுடன் இருக்க நினைக்கிறான்

இரண்டுபேர் மனதிலும் இருவருக்கும் இருக்கும் இடம் என்ன அவர்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று தெரியும் இடம் இது

விதுரனைச் சொன்னபிறகுதான் காந்தாரியையே திருதராஷ்டிரர் சொல்கிறார். மழைப்பாடலில் காந்தாரியிடம் அவர் விதுரன் தான் முதலில் என்று சொன்ன இடம் நினைவுக்கு வந்தது

அருண்