Saturday, August 1, 2015

அகலாதவளின் பதற்றம்

அன்புள்ள ஜெ

நீங்கள் அமெரிக்காவிலிருந்ததாக அறிந்ததனால் கடிதங்கள் எழுதவில்லை. வாசிக்கநேரமிருக்குமோ என்று நினைத்தேன். தொந்தரவுசெய்யக்கூடாதென்றும் நினைத்தேன் நான் எழுதும் கடிதங்கள் உங்களுக்காக மட்டும்தான்

ருக்மிணி பிறந்தகத்தை விட்டு கண்ணனுடன் செல்லப்போகிறாள். ஆனால் அவள் சஞ்சலமே இல்லாமலிருக்கிறாள். செவிலியன்னைதான் எல்லா துக்கத்தையும் பதற்றத்தையும் அடைகிறாள்

பெரிய உத்தி இது. என்ன இருந்தாலும் அவள் பெண். எல்லா பதற்றத்தையும் சொல்லவேண்டும். ஆனால் அவள் திருமகள். திருவாழிமார்பன் மார்பை விட்டு அவள் அகலவே முடியாது. ஆகவே அவள் பிரியவே இல்லை

அப்படியென்றால் அந்த உணர்ச்சிகளை எப்படி வெளிப்படுத்துவது. அதுக்குத்தான் ருக்மிணியின் மனசாட்சி போல அமிதை இல்லையா?

அற்புதமான இடங்கள்

ஸ்வாமி