Sunday, August 2, 2015

சுழி

ஜெ

ஒன்பது அன்னையரின் கோயில்கள் தோறும் ருக்மிணி போவதையும் ஒரு அற்புதமான உத்தியாகவே எடுத்துக்கொண்டேன். அவள் அகலாதவள். ஆனால் அவளுக்குள் பெரும் உணர்ச்சிக்கொந்தளிப்புகள் உள்ளன

அந்த அத்தனை உணர்ச்சிக்கொந்தளிப்பையும் ஒன்பது அன்னையரும் காட்டுகிறார்கள். சின்னப்பெண்ணான மலைமகள் முதல் கடைசியில் சிவனுடன் இணைந்த அர்த்தநாரி வரை ஒன்பது நிலைகளில் ருக்மிணி இருக்கிறாள்

அவை காதல்கொண்ட பெண்ணின் ஒன்பது நிலைகள் அல்லவா? அதிலும் கடைசியில் அவள் காணும் அந்தச்சுழி. வரதாவின் கண் அது. ஊழியின் வாசல்

அந்த நீலச்சுழிதான் கண்ணன். அது அவளை அள்ளி எடுத்துக்கொண்டுசெல்கிறது

ஸ்வாமி