Saturday, August 8, 2015

அறம் வாழும் பூமி


இன்றைய பகுதியில்(இந்திரநீலம் 69) மீண்டும் ஓர் உயர் விழுமியம் என்னை நெகிழ வைத்தது. கிருஷ்ணனின் வெற்றியை ஏற்க இயலாத ஜராசந்தன் அவனை மன்று கூடி விசாரிக்க வேண்டுமென்கிறான். அதைப் புறந்தள்ளி சாருஹாசினியை அழைத்துச் செல்லும் கிருஷ்ணனை படைவீரர்களுடன் எதிர்க்கிறான். ஆனால் நெறியின் படி, முறையாகப் போட்டியில் வென்றே அவன் அவளை அழைத்துச் செல்கிறான் என மகதரிடம் பேசுவது அஸவத்தாமனும், கர்ணனும்!!!! அதையும் மீறி படையுடன் மகதர் வந்த போது கிருஷ்ணனை முன் செல்லவிட்டு அப்படைகளை அம்பினால் சுவரெழுப்பிச் செறுப்பது அஸ்வத்தாமா, கர்ணன் மற்றும் பார்த்தன். எதிரெதிர்க் கொள்கையுடையோரையும் ஒரே அணியில் இணைத்தது அவர்களுக்குள் வாழும் அறமன்றி வேறேது!! மீண்டும் மீண்டும் மானுடம் இனியது என்பதை உணர்த்தும் தருணங்களைத் தந்து வாழ்வின் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதே வெண்முரசின் மகத்தான சாதனை என்று சொல்வேன்.
அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்