Thursday, October 29, 2015

தொன்மங்களின் இணைவு

ஆசிரியருக்கு ,

தேரோட்டி – 9, வெண் முரசில் ஒரு புதிய தரிசனம் , அழகையும் அநித்தியத்தையும் கவித்துவமாக இணைத்துவிட்டீர்கள். ஒன்றின் அழகு இன்னொன்றில் எழுவதும் அது அனைத்திலும் பிரதிபலிப்பதும் அற்புதம்.

பகுதி 8 இல்  இருவேறு தொன்மங்களின் இணைப்பு மயக்கம் என்றால் இதில் ரிஷபரின் கதை. நமது அருகர்களின் பாதையையும் எல்லா இடத்திலும் கண்ட புலி கன்றுக்கு பால் தரும் ஓவியத்தையும் நினைவு மீட்டினேன்.  

கிருஷ்ணன்