Saturday, October 10, 2015

அழகின் அழகியல்

ஜெ,

அழகென்பது காணும் கண்களில் உள்ளது என்பது cliche-தான்.  ஆனால் அதுதான் மெய்யென்று இன்றைய காண்டீபம் மெய்ப்பிக்கிறது.

ஃபால்குனை அணியும் நகைகளைத் தாண்டி, அவள் அசைவுகளைத் தாண்டி எந்த வர்ணனையும் இல்லை.  ஐந்தாறு பேர் அவளை பார்க்கிறார்கள்... அவ்வளவுதான்.  அவள் வடிவம் அவர்களில் ஏற்படுத்தும் சலனங்கள் மூலம் மட்டுமே அவள் பேரழகி, அவள் மட்டுமே பேரழகி என்பதை நிறுவிவிட்டீர்கள். 

அற்புதமான வாசிப்பனுபவம்!

சீனிவாசன்