Friday, November 27, 2015

நேமியின் நிழலில்



ஜெ சார்

நிறைய எழுதவேண்டுமென நினைப்பேன். கடிதம் எழுதி நீண்டநாட்கள் ஆகின்றன. ஆனால் நான் நினைப்பதை அன்றைக்கே பலர் எழுதியிருப்பார்கள். ஆகவே தயங்கிவிடுவேன்
காண்டீபம் தொடங்கும்போது என்ன நினைத்திருந்தீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் அது மெல்லமெல்ல முடியும்போது அச்சமின்மையையே உச்சகட்ட ஆயுதம் என்று கண்டுகொள்வதாக மாறிவிட்டிருக்கிறது.

நேமிதான் உச்சகட்ட கதாபாத்திரமாக எழுந்து வந்திருக்கிறார். நாவலில் உங்களுக்கான சவால் என்பதே இதுதான். இந்தக்கதைகளெல்லாம் பெரும்பாலும் தெரிந்தவை. இவற்றை நீங்கள் எப்படிக் கையாள்கிறீர்கள் என்பதுதான் கேள்வி. இத்தனை நாவல்களை வாசித்தபிறகும் நீங்கள் எந்தப்பக்கமாகச் செல்லக்கூடும் என்பதை ஊகிக்கவே முடியவில்லை என்பதிலேதான் உங்கள் வெற்றியே இருக்கிறது என நினைக்கிறேன்

ஆனால் இதை நீங்கள் வேண்டுமென்றே செய்வதைப்போலவும் தோன்றவில்லை. நீங்களே வேகமாக உள்ளே செல்கிறீர்கள். தேடித்தேடி ஒரு வழியை கண்டுபிடிக்கிறீர்க்ள். அது புதியவழியாக இருக்கிறது. அர்ஜுனனுக்கு இதுவரை பலர் பல நிறங்களை அளித்திருக்கிறார்கள். அவரை நேமியின் நிழலில் உட்காரச்செய்ததை ஒரு பெரிய தாவல் என்றுதான் சொல்லவேண்டும்.

மனோகரன்