Saturday, January 16, 2016

கண்ணீருடன் ஒரு சொல்

இதுவரை வெண்முரசிலேயே உச்சகட்டம் இன்றைய பகுதி ...பாண்டவர்களைவிட நூறு மடங்கு அனைத்தையும் கிடைக்க பெற்றவன் கர்ணன், உடன் பிறந்தோர் பிணைப்பு கொண்டிருப்பது விந்தையா என்ன...கர்ணன் பெற்றதை விட ....இவர்களுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் சாகலாம்....வேற என்ன பெரிதாய் குடுத்துவிடமுடியும்
சுஜாதன்..இவனா விடலை ...விளையாட்டு பேச்சையும், ஒப்பனையில்லா வெளிப்படையான அசட்டு இயல்புடையோரின் ஆளுமையை எப்போதும குறைத்தே மதிப்பிட்டுவிடுகிறோம்....அவர்கள் விஷ்வரூபம் கொள்ளும் கணங்களில் எதுவும் எதிர் நிற்க இயலா....

தான் சிறுமை படுத்தபட்டபோது பொறுத்து அமைதிகாத்து வந்தவன் ..தன் மூத்தோனுக்கு தன் எதிரே அது நிகழ பேரூறு கொண்டான் பேரறாத்தான்...கண்ணீரோடு நெஞ்சில் கைவைத்து விம்பாமல் அவன் வார்த்தைகளை கடக்கமுடியவில்லை

விஜய்சூரியன்