Sunday, February 21, 2016

இருளும் ஒளியும்






ஜெ சார்

வெய்யோனில் நாகர்களின் உலகம் ஒரு பெரிய கனவுப்பரப்பாக உள்ளது. பல அடுக்குகள் அதற்கு. குலக்கதைகளாகவும் நேரடியான புராணமாகவும் அது மாறிமாறி வந்துகொண்டிருக்கிறது. அந்த நஞ்சுக்கும் இருட்டுக்கும் மாறாக ஒளிமிக்க உலகமாக இருக்கிறது கௌரவர்களின் வாழ்க்கை. அதுவும் அதே நஞ்சை நோக்கிச் செல்லும்பாதையை தெளிவாகக் காணமுடிகிறது. மிகநுட்பமாக இந்த இருட்டையும் ஒளியையும் வைத்துப்பின்னியிருக்கிறீர்கள் என்பதைக் காணமுடிகிறது

மகேஷ்