Friday, March 18, 2016

ஆழ்தல்



நீலத்தைத்தான் மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதில் ஆழ்ந்து செல்வதற்கு ஏதோ இருக்கிறது. முன்பு ஒரு கட்டுரையில் கல்பட்டா நாராயணன் சொன்னதாக எழுதியிருந்தீர்கள், பக்தியில்தான் ஆழ்மாகச் செல்வதற்கான இடம் இருந்துகொண்டிருக்கிறது என்று. அதைத்தான் ஞாபகம் பண்ணிக்கொண்டேன்

ஏனென்றால் பக்தி என்பது ஒரு ஸமர்ப்பணம். அதுதான் இந்த பிரம்மாண்டமான இயற்கைக்கு முன்னாலும் கடவுளுக்கு முன்னாலும் மனுஷன் செய்யக்கூடுவதாக இருக்கிறது. அதைத்தான் நான் யோசிக்கிறேன்.

நாராயணன்