Tuesday, March 22, 2016

நீலம் எனும் சாதனை



ஜெ சார்

நீலம் நாவலை முதலில் தொடராகவந்தபோது வாசிக்காமல் விட்டுவிட்டேன். அப்போது அதன் மொழிநடை எனக்குக் கஷ்டமாக இருந்தது, அதன் உணர்வுகளும் சரிவரப்பிடிகிடைக்கவில்லை. கொஞ்சம் விட்டுவிட்டு அப்படியே இந்திரநீலம் வாசித்தேன். அது எனக்குப்பிடித்திருந்தது. அதை வாசித்தபோதுதான் நீலம் நாவலையும் என்னால் வாசிக்கமுடியும் என்ற எண்ணம் வந்தது. அதிலுள்ள சத்யபாமை, ருக்மிணி இருவரின் மனநிலைகளை நான் நன்றாகப்புரிந்துகொண்டேன்

ஆனால் தொடர்ந்து வெண்முரசு வந்துகொண்டிருந்தமையால் நான் நீலம் நாவலை வாசிக்கவில்லை. இப்போது ஒரு பதினைந்துநாளாக தொடர்ந்து நீலம் நாவலிலேயே வாழ்கிறேன். படிக்கப்படிக்கத் தீராத ஓர் இலக்கியச்சாதனை என்று இந்த நாவலைச் சொல்வேன். இப்படி ஒரு உணர்வுநிலைக்குள் குடியேறுவது சாதாரண விஷயம் அல்ல. அதை மொழியில் வெளிப்படுத்த ஒரு தவம் தேவை

சாரதா