Friday, April 29, 2016

கோட்டுவாய்

 
பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

"அவன் கோட்டுவாய் விட்டு கைகளைத் தூக்கி சோம்பல்முறித்தான். “நன்று” என்றபின் திரும்பி படுக்கையருகே பீடத்தில் கிடந்த தன் சால்வையை நோக்கி சென்றான்."
இதில் வரும் "கோட்டுவாய்" என்பது எதைக்குறிக்கிறது? கொட்டாவி  விடுவதையா ?
அன்புடன்,
அ .சேஷகிரி.

அன்புள்ள சேஷகிரி

கோட்டு அவய் என்றால் வளைந்த வாய் என்று பொருள். அதுதான் சரியான சொல்லாட்சி. கொட்டாவி என்பதும் சரி

தொல்தமிழில்கோட்டுவாய்தான். மலையாளத்திலும் கோட்டுவா தான்

ஜெ