Wednesday, April 20, 2016

சகஸ்ரகவசி:


இன்று கர்ணனின் கனவில் வரும் திரௌபதி தன்னை சகஸ்ரகவசி என்கிறாள். அப்படியென்றால் நரனும் நாராயணனும் சேர்ந்து உடைக்கப்போவது இவளின் கவசங்களைத்தானா? அனைத்தையும் உடைத்து இறுதியில் அவள் ஒரு அன்னை மட்டுமே, மற்றவை அனைத்தும் அவள் கவசங்கள் மட்டுமே என்பதைத் தான் அவர்கள் அவளுக்கு உணர்த்தப் போகிறார்களா? கதைகளையும், உள்ளங்களையும் வைத்து கபடியாடுகிறீர்கள் ஜெ. 

அருணாச்சலம் மகராஜன்