Friday, April 29, 2016

பீங்கான்

 
 
அன்புள்ள ஜெயமோகன்

இந்திரநீலம் வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதில் "பீங்கான்" என்ற ஒரு வார்த்தை வருகிறது. 

"பீதர்கள் குவை வைக்கோல் என தலைக்குடை அணிந்து சிறு குழுக்களாக அமர்ந்து பீங்கான் குவளைகளில் மது அருந்தி மயில் அகவலென ஓசையெடுத்து விரைந்து பேசிக்கொண்டிருந்த சிறுமன்றைக் கடந்து சென்றார்கள். " - ‘இந்திரநீலம்’ – 28, பகுதி ஆறு : மணிமருள் மலர் – 1

அதே அத்தியாயத்தில், "மென்களிமண் கலங்களில்" என்றும் வருகிறது. இதையே நான் பீங்கான் என்று எண்ணியிருந்தேன்.

"சாலையின் இருமருங்கும் பீதர்களின் மென்களிமண் கலங்களில் மது நுரைத்தது."

என் கேள்வி, பீங்கான் என்னும் சொல் பண்டைய சொல்லா? அச்சொல், வெண்முரசு மொழியில் எனக்கு தனித்து தெரிந்தது.

என் அறியாமையாய்க் கூட இருக்கலாம். தயவு செய்து விளக்குங்கள். நன்றி.

என்றென்றும் அன்புடன்,
மூர்த்திஜி
பெங்களூரு
 
அன்புள்ள மூர்த்திஜி
 
வெண்களிமண் தான் பீங்கான்
 
ஆனால் பீங்கான் தமிழ்ச்சொல் அல்ல என எனக்கு ஐயம். ஆகவே அச்சொல்லை பயன்படுத்தவில்லை. தவறுதலாக வந்துவிட்டது. அது பாரசீக மொழிச் சொல்
மாற்றிவிடுகிறேன்
 
 
ஜெ