Tuesday, August 23, 2016

உறவு



ஜெமோ சார்

இன்றைய வெண்முரசில் அந்தக்குரங்குடன் தர்மபுத்திரருக்கு இருக்கும் மானசீகமான உறவை நினைத்து நெகிழ்ந்தேன். அவருடைய குணச்சித்திரமே அதிலே உள்ளது. அவரால் உறவுகளை விட்டுவிடவே முடியவில்லை. உறவுகளிலே சிக்கி அவர் அழிகிறார். அவர் உறவுகளை பெரிதாக நினைத்ததனால்தான் அத்தனை துக்கங்களையும் அடைந்தார். குட்டிக்குரங்கும் அப்படிப்பட்ட உறவுதான்.

அவரது அந்தக்குணச்சித்திரம் உங்கள் கற்பனை அல்ல. அவர் ஒருநாயை சொற்கத்துக்குக் கொண்டுபோனார் என்று வாசித்துள்ளோம். அந்த குணாதிசயத்தைத்தான் முன்னரே கொண்டுவந்திருக்கிறீர்கள். அந்த நாயின் முன்னோடிதான் இது இல்லையா?

ராமச்சந்திரன்