Monday, August 29, 2016

நாளுண்மை



ஜெ

இத்தனை தத்துவநிலைபாடுகள் தொடர்ச்சியாக வரும்போதே நினைத்தேன். ஒரு புனைகதை, ஒரு தேடல் என்றவகையில் இது தத்துவத்தின் குறைபாடுகளைப்பற்றித்தான் திரும்பும் என்று. நேற்று சூதன் நக்கலாக அடித்து நொறுக்கினான். இன்று தருமனே அதை வேறு வகையிலே உனர்கிரான். 

தத்துவம் பிசிறின்றி கோக்கப்படும்போதே அதைச் சார்ந்தவர்களின் நாளுள்ளம் ஐயம்கொள்ளத் தொடங்குகிறது. எனவே நாளுண்மையைச் சொல்லும் ஒருவன் அதன் உயிர்நிலையைச் சுண்டி அதிரச் செய்துவிடமுடியும். நாளுண்மையில் வலுவாக நின்றிருக்கும் தத்துவம் எப்போதும் தன் இயல்பான சிறுமையை உணர்ந்தபடியே இருக்கிறது. பறக்கும் கவிச்சொல் ஒன்று அதை எழுச்சிகொள்ளச் செய்கிறது. கவ்விய அனைத்தையும் கைவிட்டு அது தானும் சிறகு விரிக்கிறது. உலகியலே தத்துவத்தின் எதிரி. தத்துவம் உலகியலின் பிடிபடாக் கனவு. 

இந்த வரிகளை மட்டும் மீண்டும் மீண்டும் வாசிக்கவேண்டும். நாளுண்மை அரிய சொல்லாட்சி. நாளுண்மைக்கும் தத்துவத்துக்குமான உறவு, நாளுண்மையைச் சந்தித்ததுமே தத்துவம் பறக்க ஆரம்பிக்கிறது என்னும் வரி என்னை அற்புதமான ஒரு மலர்ச்சி கொள்ள வைத்தது

சிவராம்