Saturday, August 27, 2016

சிறுத்தையும் யானையும்





இன்றைய வெண்முரசில் புலியின் பாதை,யானையின் பாதை என்னும் உவமைகள் அழகாக இருந்தன. உண்மையில் யானை ஒற்றைக்கு ஒற்றை சண்டைபோட்டு ஜெயித்துத்தான் பிடியானைகளை வென்றெடுக்கும். அதை நிறைய பதிவுசெய்திருக்கிறார்கள். களிறுயானை கொம்பு குலுக்கியபடி அங்கே வந்து நிற்கும் விவரிப்பு ஒரு வரி என்றாலும் மனதிலே நிற்கவைத்தது

இன்று வந்திருக்கும் ஓவியமும் அற்புதமானது. அந்தக்காட்சியை கண்முன் நிறுத்தியது. ஷண்முகவேலுக்கு என் மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவிக்கவும்

செம்மணி அருணாச்சலம்