Tuesday, August 16, 2016

உறவுகள்






ஜெ

நேற்று வந்த  குட்டிக்குரங்கை விதுரர் சொல்லும் அந்த தத்துவத்துடன் இன்றுதான் இணைத்து வாசித்தேன். வாழ்க்கை உறவுகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. சிலந்தி வலைபின்னுவதுபோல இயல்பான ஒன்று அது. அதை ஏன் இல்லை என்று மறுக்கவேண்டும்? அதை மாயை என்று நினைக்கவேண்டுமா என்ன ? அதுவே ஓர் உண்மை அல்லவா? அதை அப்படியே ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது? அந்தக்குரங்கின் அன்பை தட்டிவிட்டு மேலே சென்று அடையும் உண்மை அப்படி என்ன பெரிதாக இருந்துவிடப்போகிறது? இதையே நினைத்துக்கொண்டிருந்தேன்

ராஜன்