Tuesday, August 30, 2016

எதிரிநிலை




அன்புள்ள ஜெமோ

நான்  முப்பத்திரண்டு ஆண்டகளுக்கு முன்பு திருப்பராய்த்துறைக்குச் சென்றிருந்தேன். சுவாமி சித்பவானந்தரால் உருவாக்கப்பட்டது அந்த மடம். அதன் தலைவராக அவர் இருந்து புகழ்பெற்றது. அவர் அப்போது ஒரு பெரிய ஆளுமையாக இருந்தார்
\

நான் அங்கே சாப்பிட அமர்ந்தபோது அங்கே சமையல்வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் சித்பவானந்தரை கடுமையாக விமர்சனம் செய்தார். அவன் இவன் என்றெல்லாம் சொன்னார். குறிப்பாக அவருடைய ஜாதியைச் சொல்லி பேசினார் 

நான் அதைப்பற்றிக் கேட்டபோது அவர் அப்படித்தான் என்று சொன்னார்கள். சித்பவானந்தர் அவரை கண்டுகொள்வதில்லை என்றார்கள். அவர் அங்கே இருந்தார். அவரை ஏன் நீக்கவில்லை என்று எனக்குப்புரியவில்லை

அவரை நீங்களும் கண்டிருப்பீர்கள். நீங்கள் அங்கெல்லாம் சென்றதை எழுதியிருக்கிரீர்கள். இந்த கதாபாத்திரத்தை இன்றைக்கு பார்த்தேன். வெண்முரசில் வரும் பத்ரரை புரிந்துகொள்ளவே முடியவில்லை. அதைவிட அவர்களை இவர்க்ள் ஏன் ஒப்புக்கொண்டு கூடவே வைத்திருக்கிரார்கள் என்பதும் மர்மமே

ஆர். மகாதேவன்