Monday, September 19, 2016

பாண்டு




ஜெ,

வெண்முரசில் மானைத்துரத்திக்கொண்டு தர்மன் செல்லும் நிலம்பற்றிய வர்ணனை எனக்கு சங்கப்பாடல் ஒன்றை நினைவூட்டியது.அதளெறிந் தன்ன நெடுவெண் களர் என்னும் வரி எனக்கு மனதில் தோன்றியதுமே அதைத்தான் எழுதியிருக்கிறீர்கள் என்று புரிந்தது

உடனே அடுத்த நினைவு இணைமானை பாண்டு கொலைசெய்வதைப்பற்றியது. அது எங்காவது இருக்கிறதா என்று பார்த்தேன். அதுவும் மறைமுகமாகக் குறிப்புணர்த்தப்பட்டிருக்கிறது

சரவணன்