Saturday, November 26, 2016

கதைக்குள் கதை

\

ஜெ

கதைக்குள் கதைக்குள் கதை என்று சொல்லிக்கொண்டே போகும் இந்த இடம் வெண்முரசில் மிகவும் சிக்கலான ஒன்று என்று தோன்றுகிறது. சண்டன் ஒரு கதை சொல்கிறான். சண்டன் கதைக்குள் பிரசண்டனும் பிரசாந்தரும் வருகிறார்கள். பிரசண்டன் சொல்லும் கதைக்குள் கபாலரும் சுசித்ரரும் வருகிறார்கள். அவர்களும் கதை சொல்கிறார்கள். அவர்கள் சொல்லும்கதைக்குள் கதாபாத்திரங்களும் கதைகளைச் சொல்கிறார்கள்

இப்படி கதைக்குள் கதை என்று செல்வதை படிப்படியாக வாசித்து நினைவில் வைத்திருப்பது ஒரு சவால்தான். அதை ஒருமுறை சொல்லிப்பார்த்துக்கொண்டால் எளிது என நினைக்கிறேன்

சரவணன்