Friday, December 16, 2016

இந்திரனும் ராமனும் கிருஷ்ணனும்


ஜெ

ராமனாகப் பிறந்தவன்தான் தன்னை வெல்ல தன் இயல்புகளை எல்லாம் எடுத்துகொண்டு கிருஷ்ணனாகப்பிறந்துள்ளான் என இந்திரன் சொல்லும் இடம் மிக நுட்பமானது. வரலாற்றைப்பார்த்தால்  இந்திரன் உருமாறித்தான் கிருஷ்ணனின் உருவம் உருவாகி வந்திருப்பதைக் காணமுடியும்.  இந்திரனின் எல்லா சிறப்புத்தன்மைகளும் கிருஷ்ணனுடையவையாக ஆகிவிட்டன. தந்திரமாகப்போர் செய்வது, மாறுவேடத்தில் போய் ஏமாற்றிவிடுவது, பெண்களைக் கவர்வது எல்லாம் உண்மையில் இருவருக்கும் பொதுவான குணங்களாக உள்ளன. 

இந்திரன் பிராமணனாகச்சென்று வருணனையும் விருத்திரனையும் ஏமாற்றுவதைப் பார்க்கும்போதுகிருஷ்ணனும் இதேபோல கர்ணனை ஏமாற்றியதை நினைத்துக்கொண்டேன். இந்த மாற்றம் இந்து மதத்தில் நடந்த மிகப்பரிய தலைகீழ் மாற்றம். இதை நிகழ்த்தவே மகாபாரதப்போர் நடந்தது என நீங்கள் சொல்லியிருப்பது அற்புதமான ஒரு சரித்திர தரிசனம்

செம்மணி அருணாச்சலம்