Wednesday, December 7, 2016

இடங்கள்



ஜெ

நீங்கள் எழுதும் பல விவரிப்புகளை முன்னாடியே வாசித்தோமே என்று தோன்றும். கொஞ்சம் மூளையைக்கசக்கினால் கண்டுபிடிக்கவும் முடியும்.உதாரணமாக விருத்திரனின் முகம் கோட்டோவியமாகத் தெரியும் இடம் இடக்கல் குகைச்சித்திரத்தை ஞாபகப்படுத்துகிறது. நீங்கள் அதை எழுதியிருக்கிறீர்க்ள்

அதேபோல இன்னொரு சித்திரம் அப்படியே இரண்டு சிலைகளை ஞாபகப்படுத்துகிறது. எலிபெண்டாகுகையின் உள்ள மும்மூர்த்தி சிலை. நீங்கள் எழுதிய அஸாமில் உள்ள சிலை. அந்த இடத்தின் பெயர் உனக்கோட்டி. அங்கேதான் பாறைகளை முகங்களாகச் செதுக்கியிருந்தார்கள்