Tuesday, January 10, 2017

பசுபதி






அன்புள்ள ஜெ

கிராதம் மிக அழகாக உச்சம் அடைந்தது. பாசுபதம் பெறுவதற்காகச் சென்ற அர்ஜுனன் அங்கே கைலையில் ஒரு கூழாங்கல்லைத்தான் எடுத்துக்கொள்கிறான். அது அங்கிருக்கும் ஒரு அன்றாட மெய்மை. ஆனால் திரும்பி வரும்போது அவனுக்குத்தெரிகிறது அது கைலை மலைமுடியேதான். அந்த உச்சத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை. அதை அங்கேயே திரும்பி விட்டுவிட்டு அவன் மீண்டு வருவது கவித்துவமானது. மொத்தநாவலுமே குறியீடுகள் வழியாக மிகப்பெரிய கவித்துவத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறது

மனோகரன்