Sunday, January 8, 2017

அம்மையின் வருகை





ஜெ

மொத்த நாவலிலும் அம்மை வந்ததுமே ஒரு பெரிய அழகு வந்துவிட்டது. சைவ மரபின் உக்கிரத்தை தணிக்கும் குளிர்மழை அம்மைதான். அவள் கருணையுடன் வந்து நின்றபோதே எல்லாம் வேறுமாதிரி ஆகிவிட்டது.  அதுவரை அர்ஜுனனும் கிராதசிவனும் பேசிக்கொண்டிருந்த சிக்கலை எல்லாம் பூ என ஊதிவிட்டாள். த சும்மா கெட என சிவனை அதட்டி கையிலே பிள்ளையைக்கொடுத்து சோமாஸ்கந்தராக ஆக்கிவிட்டாள்.

சிவையாகிய காளியின் இந்த அம்மைத்தோற்றத்தை  நாயன்மார்கள் பாடிப்பாடி உருகியிருக்கிறார்கள். ஒவ்வொரு வரியும் அன்னையை வர்ணிக்கும் அழகு கண்டு நிறைவு வந்தது

சுந்தரராஜன்