Friday, January 6, 2017

பாசுபதப் பயணம்



அன்புள்ள ஜெமோ

அர்ஜுனன் கிருஷ்ணனுடன் போரிட்டு [அவனுள் வாழும் மகாநாராயணத்துடன் போரிட்டு] தோற்றுத்திரும்பி அதற்கு சமானமாக ஆகும்பொருட்டு பாசுபதம் தேடிச்செல்கிறான். இது ஒரு பாடம்

அர்ஜுனன் வேதமெய்மை தேடிச்செல்கிறான். அதை நாராயணம் வரை அறிந்துவிட்டான். இனி அறியவேண்டியது வேதத்தின் வேர். அது பாசுபதம். அதைத்தேடிச்செல்கிறான் இது இன்னொரு பாடம்

இரண்டும் மாறி மாறி வருவதுபோல அமைக்கப்பட்டுள்ளன வெண்முரசில். இரண்டையும் மாறிமாறி வாசித்தால்தான் முழுமைகிடைக்கிறது

சந்தானகிருஷ்ணன்