Tuesday, February 21, 2017

இன்பம்



ஜெ

மனிதர்களுக்கு இருக்கும் ஏழு பேரின்பங்களைப்பற்றி விஸ்வ வசுவும் தேவர்களும் இந்திரனிடம் சொல்லும் இடம் கவித்துவமானது. மனிதர்களிடம் இருக்கும் அறியாமையும் நிலையின்மையும் கனவும்தான் அவர்களின் இன்பம். அதன் உச்சம் அவர்களுக்கு அறியவும் தவம்செய்யவும் வாய்ப்புள்ளது என்பது\

சின்னவயசில் ஒரு பென்சிலுக்காக ஏங்கியிருக்கிறேன். இன்றைக்கு நினைத்ததை வாங்கும் பணம் உண்டு. ஆனால் வேண்டிய பொருளுக்காக கனவு கண்டு ஏங்கி அதற்காக காத்திருக்கும் இன்பமே இல்லாமலாகிவிட்டது. இதைவைத்துதான் அதைப்புரிந்துகொண்டேன்

சண்முகம்\