Friday, February 24, 2017

இருவர்




ஜெ

வெண்முரசில் இதுவரை ஏராளமான கதாபாத்திரங்கள் வந்துவிட்டன. ஆனாலும் மூதரசரும் அரசியும் இதுவரை வராத அபூர்வமான கதாபாத்திரங்கள். கொஞ்சம் கர்ணனின் அம்மா அப்பா சாயல் உள்ளது. மற்றபடி மிக அபூர்வமானவர்கள். கிழவர் உணர்ச்சிக்கொந்தளிப்பானவராகவும் பாவமானவராகவும் இருக்கிறார். கிழவி ஆழமானவள். நுட்பமானவள். அறிவானவள். கிழவருக்கு நிலையான மனநிலை இல்லை கிழவி எப்போதுமே சமநிலையில் இருக்கிறார். இரண்டு பேரும் இரண்டுவகையில் துக்கத்தை எதிர்கொள்கிறார்கள். இப்போது இன்பத்தை எதிர்கொள்கிறார்கள். இவர்க்ளுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாதே என மனம் வேண்டிக்கொள்கிறது

மகேஷ் ஜெயராமன்