Wednesday, April 26, 2017

விடுபட்டது





ஜெ

வெண்முரசு மாமலரில் ஒர் அத்தியயாம் விடுபட்டிருந்தது. நான் ஒழுக்கிலே எந்தக்குறையையும் உணரவில்லை. இடம் மட்டும் கொஞ்சம் சிக்கலாக இருந்தது. அந்த அத்தியாயம் வந்தபோது பெரிதாக கதை என ஏதும் சேரவில்லை. ஆகவே அது இல்லை என்றாலும் சரிதானே என நினைத்தேன். ஆனால் சாரங்கன் அவர்களின் கடிதத்தை வாசித்தபின் அந்த அத்தியாயத்தை வாசித்தேன். அது சாயைக்கும் தேவயானிக்குமான உறவு முறிவதைக் காட்டுகிறது. அது மெல்ல மென்மையாக சொல்லப்பட்டிருக்கிறது. அது இல்லாவிட்டால் அவள் திடீரென்று சீறுவதும் பிரிவதும் ஜஸ்டிஃபை ஆகியிருக்காது என தெரிகிறது. என் வாசிப்பை மேலும் தீட்டிக்கொள்ளவேண்டும் என நினைத்துக்கொண்டேன்

செல்வராஜ்