Thursday, April 27, 2017

வாசக எதிர்வினை






ஜெ

விஷ்ணுபுரத்தில் ஆரம்பித்து மாமலரின் நேற்றைய அத்தியாயம் வரை உடன் பயணித்தாலும் கடிதம் எழுதவேண்டும்  என்ற எண்ணம் வரவில்லை .தூரத்தில் இருந்தபடியே ரசித்துக்கொண்டிருக்கலாம் என்றுதான் இருந்தேன்.என் மனைவி அறம்,வெண்கடல் மேலும் நீலம் படித்ததில் இருந்து தினம் ஒரு தடவையாவது உங்களைப்பற்றி பேச்சு வந்துவிடும்.சென்னையில் வெண்முரசு வெளியீட்டு விழாவிற்கு சென்றாகவேண்டுமென அடம்பிடித்து என்னையும் அழைத்துக்கொண்டு வந்தார்.

இன்று உங்களுக்கு பிறந்தநாள் என்றவுடன் வாழ்த்து சொல்லியாகவேண்டுமென்று கூறிவிட்டார்.

நீண்டநாட்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறோம்

        --அங்கம்மாள் மற்றும் சிவசுப்பிரமணியன்