Tuesday, May 16, 2017

மழைப்பாடல் நோக்கி





அன்புள்ள ஜெ,

மாமலரில் இருந்து மழைப்பாடல் நோக்கி ஒரு பயணம் உள்ளது. அதை நான் தற்செயலாகவே கண்டுபிடித்தேன். மழைப்பாடலில் யது கிளம்பிச்சென்று பாலைநிலத்தைக் கண்டடைந்து அங்கே ஒரு யாதவச் சமூகத்தை அமைக்கும் விரிவான கதை உள்ளது. அதன்பின் எப்படியெல்லாம் யாதவச் சமூகத்தின் வரலாறு பல்வேறு கிளைகளாகப்பிரிந்து வளர்ந்தது என்பது சொல்லப்படுகிறது. 




அதேபோல துர்வசு தன் ஆதரவாளர்களுடன் கிளம்பிச்சென்று காந்தார  


இந்த இரண்டு கதைகளும் மிகச்சரியாக மாமலர் முடிந்த இடத்திலிருந்து ஆரம்பித்து வளர்கின்றன. இந்த சுழற்சியை ஒரு அற்புதமான புனைவு என்று சொல்வேன். அதைக்காட்டிலும் ஒரு வரலாறு என்றுதான் நம்பத்தோன்றுகிறது.

ராகவன் மகாதேவன்