Monday, May 22, 2017

தனித்தனி கதைகள்


சார்,
தருமன்,அர்சுனன்,பீமன் ஆகியோருக்கு தனித்தனியாக கதை எழுதிய நீங்கள் நகுலன் சகாதேவனுக்கு தனித்தனி கதைகள் எழுதாமல் பாண்டவர்களின் தலைமறைவு வாழ்க்கை கதையை எழுதுவது சரியா ?

 மல்லி சேகர்


அன்புள்ள மல்லி சேகர்

உண்மையில் மகாபாரதத்திலேயே அவர்களுக்கு பெரிய இடம் இல்லை. அதைவிடக்கூடுதலாகவே வெண்முரசில் இடமுள்ளது. அதற்கப்பால் செல்ல கதை இல்லை. புதிதாகப்புனையமுடியாது அல்லவா?
ஜெ