Sunday, May 7, 2017

ஒருமை






அன்புள்ள ஜெ

மாமலரின் முடிவு அபாரமான ஒருமையுடன் அமைந்திருக்கிறது. எங்கெங்கோ சென்ற ஆயிரம் பக்க நாவலில் ஒவ்வொன்றும் கச்சிதமாகக் கொண்டு சென்று முடிக்கப்பட்டிருக்கின்றன. குரங்குகள், பழம்புளித்த மதுவின் களிவெறி என பல அத்தியாயங்களுக்கு முன்னால் போடப்பட்ட எல்லா சரடுகள் கொண்டுவந்து சேர்க்கப்படுகின்றன. அந்த மது பாண்டவர்களுக்கு அவர்களின் சகோதரத்தன்மையின் கொண்டாட்டமாக இருந்தது. அதேபோலத்தான் அனுமனும் தம்பியும் சகோதரத்தன்மையை மதுவுடன் கொண்டாடுகிறார்கள்.

எஸ்.ராமமூர்த்தி