Monday, May 22, 2017

ஷண்முகவேல்

 
 
அன்புள்ள ஜெவுக்கும் நண்பர்களுக்கும்

இரண்டு வாரம் பொறுத்து பார்த்து மிகவும் வெறுப்புடன் இதை எழுதுகிறேன். ஷண்முகவேல் ஒவியத்தை திருடிய எழுத்தாளர் பதிப்பகத்தினர் யாரும் பதிலளிக்கவில்லை. பேஸ்புக் மூலமும் தனிப்பட்ட முறையிலும் எழுதினேன், பதில் இல்லை.

முன்னர் அமேசான் மூலம் ஒவிய விற்பனை செய்த சிறுவணிகர்கள் சொல்லி அரைநாளில் எடுத்துவிட்டு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்கள், பயமோ உண்மையான அறவுணர்வோ, உடனே செய்தார்கள். இந்த எழுத்தாளருக்கு அதெல்லாம் பெரிதாக தெரியவில்லை, பப்ளிக்காக காறித்துப்பினாலும் துடைத்துபோட்டுவிட்டு போகிறார்கள்.

தமிழ் இணைய சமூகத்திலேயே ஜெயமோகன் தளத்தில் இந்த செய்தி வந்தும் கூட யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு பத்து பேராவது கேட்டிருக்கலாம். Plagiarism எல்லாம் நம்மவர்க்கும் ஒரு பொருட்டே இல்லை போல. 

இந்த கௌந்தேயாஸ் புத்தகத்தை வாங்கி பாதி வரை படித்தேன். இதுவரை காப்பி என்று எதுவும் தோன்றவில்லை. மீதி படித்துவிட்டு ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

எப்படி இருந்தாலும் ஓவியத்திருட்டுக்கு பதில் சொல்லியாக வேண்டும். நண்பர்கள் இதை இதழ்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் இதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல உதவவேண்டும்.

மது