Thursday, June 22, 2017

அனல் மேல் நிற்றல்


அன்பு ஜெமோ சார்,
                              
                    நீர்க்கோலம் பருப்பொருளாகவும் கண்ணின் நீருடன் கலந்து எழுதப்படும் நீர்க்கோலம்தான்  சார்.

                                       பல நேரம் வெண்முரசிலிருந்து பிய்த்துக் கொண்டு அன்றாடத்தில் ஈடுபட தவிக்கும் வேளையில்(சுக்ரரின் மகளுக்கே ஓரிரவுதான் அனல் மேல் நிற்றல் என்றால் வாசகருக்கு இரு முழுநாட்கள்)  வெண்முரசை நிகழ்த்தும் தங்களின் சமநிலையுடன் கூடிய செயலூக்கத்தையே எண்ணிக் கொள்வேன்.

வழக்கம் போல் அதற்கான வரையறையும்  வெண்முரசில்.

                    “இரண்டாக பகுத்துக்கொள்வதைப்போல் பெருகும் வழி பிறிதொன்றில்லை.அவ்விரண்டில் ஒன்று பெருகி பிறிதொன்றை உண்ணுமென்றால் அமையும் முழுநிலைபோல் சிறந்த தவமும் இல்லை”
     
சிவமீனாட்சி.