Wednesday, September 20, 2017

அபிமன்யு



வணக்கம் ஜெமோ,

ஏன் எங்களை இப்படி வதைக்கிறீர்கள்..... அபிமன்யுவின் ஒவ்வொரு செயலும் சொல்லும் இப்போதே நெஞ்சில் கத்தியை பாய்ச்சுகிறதே. ஒவ்வொரு கணமும் அவனை காதலிக்க வைக்கிறீர்கள்... அவன் இழப்பை எப்படி தங்குவோம்?

நம் முன்னோர்கள் மூடர் அல்ல..... வாட்சாப் வெறியர்களின் வார்த்தைகளை சொல்லி எங்களை கெக்கலிக்க வைத்து விட்டீர்கள். அவன் பெண்களை பெயர் சொல்லி அழைப்பதும், வீரர்களுடன் அளவளாவுவதும்... ஆகா ஆகா.

//“அது சற்று முன்புவரை… இனிமேல் நான் இறந்தால் அருகே இறந்துகிடக்கும் உடல் உம்முடையது.”//
//நுழைவது கூட எளிது… வெளியேறுவது கடினம்…” அபிமன்யூ “மெய்யாகவா?” என்றான். “அப்படியென்றால் அதுதான் என் இடம்… வருக!”//

இப்படி எல்லாம் வேறு கோடிட்டு காட்டுங்கள்.. கடவுளே, செஞ்சோற்று கடன் தீர்த்த கர்ணனுக்கு கூட இப்படி வருந்த மாட்டோம் போலிருக்கிறதே. உப பாண்டவர்களையும் இப்படி உருவகித்து விடாதீர்கள், தாங்க மாட்டோம்.

அன்புடன் 
சுவேதா