Friday, September 1, 2017

தேவயானிக்கும் புலிகளுக்குமான உறவு



ஜெ

நான் மாமலர் நாவலை இப்போதுதான் முடித்தேன். தேவயானிக்கும் புலிகளுக்குமான உறவு பல படிகளாகச் சுருளவிழ்ந்தபடியே இருந்தது வாசிக்க வாசிக்க விரிந்தது. காதலனாகவும் பின்னர் அவளுடைய அகந்தையாகவும் புலிகள் மாறின. அவளே புலி என்றும் தோன்றியது. புலி என்ற வரியிலிருந்து வாசிக்க கூடிய பல இடங்கள் அழகானவை. உதாரணமாக அவள் புலியால் ஆட்டுவிக்கப்படுகிறாள். அந்தப்புலியைத்தான் வாலைப்பிடித்துச்  சுழற்றி வீசுகிறான் பீமன். அந்தப்புலியை கையிலிருந்த பூ நலுங்காமல் காப்பாற்றிக்கொண்டு அடித்து வீழ்த்துகிறான் கச்சன்

அருமையான நாவல். காவியத்தன்மை என்பதே இதுதான்

பாலசுப்ரமணியம்