Tuesday, September 5, 2017

ஒருகனவு



அன்புள்ள ஜெ

மழைப்பாடலின் பிரம்மாண்டத்தை வாசித்துக்கொண்டிருக்கிறேன். நான் தொடராக வாசித்தேன். அம்மாவுக்காகத்தான் புத்தகம் வாங்கியது. அம்மாவுக்கு காடராக்ட். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்த்து இப்போது நீலத்தை அடைந்திருக்கிறார்கள். நான் லீவில் வந்தபோது மழைப்பாடலை மீண்டும் வாசித்தேன்.  புத்தகமாகத்தான் வாசிக்கவேண்டும் என்று இப்போது நினைக்கிறேன். அற்புதமான ஒருகனவு அனுபவம். அந்நாவல் முழுக்க வந்துகொண்டிருக்கும் நுட்பமான குறிப்புகளை கவனிக்கிரேன். அந்த அம்புகள் காத்திருக்கின்ரன. ரத்தமழை பெய்கிரது. ருத்ரர்கள் ரத்தம் காத்திருக்கிறார்கள். பாலையில் ஓநாய் பசித்திருக்கிறது. ஒரு பெரிய கவித்துவமான கேன்வாஸ் இது


ரவிச்சந்திரன்