Tuesday, October 24, 2017

உணர்வுகள்



அன்புள்ள  ஜெமோ 

              மகாபாரத  கதை மாந்தர்கள்  அனைவரையும் , அணுக்கமாகவும் , அனுகுந்தோறும்  நுணுக்கமாகவும் ,நுண்மையாகவும்  நுகந்தறியும்  வாய்ப்புகளையும் , சந்தர்ப்பங்களும்  வந்துகொண்டே  உள்ளன.  இன்று அஸ்வத்தாமனின்   உள்ளக்  கிடங்கையும் , அவனின்  நுண்ணறிதலையும்  அறியும்  பொழுது   ஏ .....யப்பா எவ்வளவு அழகான  ஆன்மாக்களை  (உங்களால் ) அறியவைத்துள்ளீர்கள் .                    
            

 வாழ்நாளில்  நாம்  அதிகம் அறிந்திராத , அறிய விரும்பும்  அழகிய ஆன்மாக்களுடன்  மகாபாரதம்  வழியே  பயணிப்பது  பெரும்  பேறே .
              
உங்களின்  எழுத்துக்களினுடே  அதை  நிகழ்த்திக் கொண்டுள்ளோம் .
ஒவ்வொருவரையும் நுணுகி அறியுந்தோறும்   நெஞ்சம் விம்ம  கண்ணீரை சுண்டியபடியே  படிக்க வேண்டியுள்ளது .
           
  நன்றி ஜெமோ  உங்களின் எழுத்தின் வாயிலாக  நாங்களும் எங்களின் இருப்பை  உணர்ந்து கொண்டுள்ளோம்.
 வாழ்க  வளமுடன்

ஹேமா ரவி கோவஒ