Tuesday, November 14, 2017

நாராயணவேதம்



அன்புநிறை ஜெ,

இன்றுதான் மிகத் தாமதாக எரிந்தது விளக்கு. 

 //நம் குடியிலிருந்து பல்லாயிரம் காலம் இந்நிலத்தில் அறமும் முறைமையும் மெய்மையுமென வாழும் நாராயண வேதம் எழுந்ததென்பது நமது பெருமை//

இன்றுதான் தோன்றியது -
நாராயண வேதம் நாராயண குருகுலத்தின் குரல் வழியாக ஒலிக்கிறதென.

முன்பொரு கடிதத்தில் எழுதியிருந்தேன் என நினைக்கிறேன்: தமனரின் குருகுலம் நமது ஊட்டி குருகுலத்தையும் நினைவுபடுத்துகிறதென.

வேதமுடிபுக் கொள்கையிலிருந்துதானே கீதை உரைப்பவன் வரமுடியும். 


மிக்க அன்புடன்,
சுபா.